செய்திகள் உலகம்
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
சிங்கப்பூர்:
ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனம் முனைவர் எச். எம். சலீம் அவர்களின் “பேசாப் பொருள்” நூலையும் Children of Metropolis (பெருநகரத்துச் சிறுவர்கள்) என்ற தலைப்பிலான கவிஞர் இசாக் அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் இரண்டு நூல்களை 15 ஆகஸ்ட் அன்று பிற்பகலில் வெளியிட்டது.
ஜாமியா நிறுவன நிகழ்வுகள் எப்போதும் தனக்கென ஒரு உயர் தரத்தோடு நடைபெறும் என்பதற்கொப்ப நேற்றைய நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது.
ஜாமியா சிங்கப்பூர் தலைமையகத்தில் அல் ஃபைசல் அரங்கில் சிறப்பான ஏற்பாடுகளோடு நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு ஜாமியா சிங்கப்பூர் தலைவர் பேராசிரியர் முனைவர் டத்தோ முஹம்மது ஹஸ்பி அபூபக்கர் தலைமை தாங்க , சட்டம், போக்குவரத்துத் துறைகளுக்கான மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரு நூல்களையும் வெளியிட்டு சிறப்பித்தார்.
முனைவர் சலீம் அவர்களைப்பற்றியும் நூலைப்பற்றியும் கல்வியாளர் பொன். சுந்தரராசு, வளர் தமிழ் இயக்கத் தலைவர் ஹாஜி நசீர்கனி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி அ. முஹம்மது பிலால் ஆகியோரின் சிற்றுரைகள் காணொலிகளாக காட்டப்பட்டன.
ஊடகவியலாளர் ஸதக்கத்துல்லாஹ்நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
- கவிஞர் தெளஃபீக் அஹமது
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
