நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவுத் துறை லோரி தொடர்புடைய கோர விபத்து குறித்து போலிஸ் விசாரிக்கட்டும்: ஜக்காரியா

கோலாலம்பூர்:

இன்று அதிகாலை குடிநுழைவுத் துறை லோரியுடன் மூன்று பேர் கொண்ட குடும்பம் மோதிய கோர விபத்து தொடர்பான விசாரணையை குடிநுழைவுத் துறை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.

குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் குறித்த முழுமையான அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.

இவ்விசாரணைக்கு குடிநுழைவுத் துறை முழுமையாக ஒத்துழைக்கும்.

மேலதிக விசாரணையை அதிகாரிகளிடமே விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

சட்டத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்துவதை நாங்கள் அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset