நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டியதன் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக் கொள்கிறது: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டியதன் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக் கொள்கிறது.

ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

நாட்டின் நிர்வாகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சீர்திருத்தத் திட்டங்கள் தொடர்வதற்கும், கட்சியானது அம்னோவுடன் ஒரு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற அரசியல் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக்கொள்கிறது.

இந்த நிலைப்பாட்டிற்கு, நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் வரை ஜசெக அரசாங்கத்தில் நீடிக்க வாக்களித்த கட்சிப் பேராளர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

நாங்கள் அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும் என்று பேராளர்கள் வாக்களித்துள்ளனர்.

அம்னோவுடன் நாங்கள் பணியாற்ற வேண்டும் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு அவர்கள் இதை விரும்புகிறார்கள்.

இது அனைத்துப் பேராளர்களும் புரிந்துகொண்ட ஒரு அரசியல் யதார்த்தம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset