நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல், மக்களின் நிலைத்தன்மைக்காக அம்னோ, தேசிய முன்னணியுடனான ஒத்துழைப்பை தேர்வு செய்தேன்: டத்தோஸ்ரீ அன்வார்

மலாக்கா:

அரசியல் நிலைத்தன்மையையும் மக்களின் செழிப்பையும் உறுதி செய்வதற்காக, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ, தேசிய முன்னணியுடனான ஒத்துழைப்பைத் தொடரத் தேர்ந்தெடுத்தேன்.

பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

எந்தவொரு கட்சி மீதான குற்றவுணர்ச்சி அல்லது கோபத்தின் காரணமாக அல்லாமல், மக்களின், நாட்டின் நலன்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நான் நிலைத்தன்மையையும், மக்களின் செழிப்பையும் தேர்ந்தெடுக்கிறேன்.

நான் தேசிய முன்னணி, அம்னோ இடையே நேரடி ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறேன்.

மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் மாநாடு  2026-ன் நிறைவுரையில் பேசிய அவர்,அவர்கள் தங்கள் தேர்வுக்குப் பதில் சொல்லட்டும்.

அம்னோ, தேசிய முன்னணியுடனான அரசியல் ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் விவேகத்துடனும், புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset