நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கெஅடிலானுக்கு திரும்ப வேண்டும் என்ற அன்வாரின் அழைப்பு எங்களுக்கானது அல்ல: ரபிசி

மலாக்கா:

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கெஅடிலானுக்கு திரும்ப வேண்டும் என்ற அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரின் அழைப்பு எங்களுக்கானது அல்ல.

கெஅடிலானின் முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

முன்னாள் தலைவர்களும் தொண்டர்களும் கட்சியின் போராட்டப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை, தன்னையோ அல்லது நிக் நஸ்மியையோ நோக்கியதாக நான் கருதவில்லை.

மாறாக கட்சியை விட்டு வெளியேறிய அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்ட பல முன்னாள் கெஅடிலான் தலைவர்களை நோக்கியே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

தியான் சுவா, டாக்டர் சேவியர் ஜெயகுமார் என ஒரு காலத்தில் அஸ்மின் அலியுடன் இருந்த சிலர் போன்ற குழுக்களையே அவர்  குறிப்பிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

எங்களை அல்ல, என்று நேற்று இரவு, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான பெர்சாமா கட்சி வேட்பாளர் அறிவிப்பு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset