செய்திகள் மலேசியா
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
இந்த நாட்டில் மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது உட்பட, இன அரசியலின் சுவர்களை உடைப்பது கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் இதனை ஒப்புக்கொண்டார்.
மலாய் வாக்காளர்களிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாததால், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சென்னா மாநில சட்டமன்ற இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறியபோது, மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் தொலைநோக்குப் பார்வை வெற்றி பெறவில்லை.
பல்வேறு இன வாக்காளர்களின் ஆதரவை ஜசெகவால் பெற முடியும் என்பதையும், மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபிக்கும் நம்பிக்கையுடன் நான் அந்தப் பகுதியில் போட்டியிட்டேன்.
இருப்பினும், மலாய் வாக்காளர்களிடமிருந்து எங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்காததால், அந்த தொலைநோக்குப் பார்வை வெற்றி பெறவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
நமது அரசியல் பயணம் மேலும் தொடர்வதற்கு, இந்தத் தடையை எப்படி உடைப்பது என்பது ஜசெகவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று இங்கு நடைபெற்ற ஜசெக 2026 தேசிய மாநாட்டில் பேசும்போது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:21 pm
ஜசெக தேசிய மாநாடு; இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்: கோவிந்த் சிங்
August 16, 2026, 11:18 am
