நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ், மலாக்கா, சரவாக் உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசக்கூடும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவின் பல்வேறு பகுதிகள்,  சரவாக் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் குறுகிய கால வானிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை பிற்பகல் 2 மணி வரை அமலில் இருக்கும்.

பெர்லிஸ், மலாக்கா மாநிலங்கள் முழுமையாகவும், கெடா, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மாநிலங்களின் சில பகுதிகளும், சரவாக்கின் குறிப்பிட்ட சில இடங்களும் இதில் அடங்கும்.

இந்த எச்சரிக்கையானது, ஆறு மணி நேரத்திற்கு மிகாத கால அளவைக் கொண்ட தொடர்ச்சியான அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset