செய்திகள் மலேசியா
எம்எம்ஒய்சியின் 11ஆவது ஆண்டு மீலாதுன் நபி ஊர்வலம்; 5,000 பேர் திரள்வார்கள்: அஸ்ரின், ரிஃபாய் நம்பிக்கை
கோலாலம்பூர்:
எம்எம்ஒய்சியின் 11ஆவது ஆண்டு மீலாதுன் நபி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் கலந்து கொள்வார்கள்.
எம்எம்ஒய்சியின் ஆலோசகர் அஸ்ரின், தலைவர் முகமது ரிஃபாய் ஆகியோர் இந்த நம்பிக்கையை தெரிவித்தனர்.
மலேசியாவில் மீலாதுன் நபி ஊர்வலத்தை எம்எம்ஒய்சி அமைப்பு இடைவிடாது நடத்தி வருகிறது.
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக நினைவுகூர்கிறார்கள்
இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.
அவ்வகையில் தான் இந்த ஊர்வலத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
மேலும் இதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாய மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் முதன்மை நோக்கமாகும்.
நாட்டில் உள்ள பல இந்திய முஸ்லிம் அமைப்புகளில் வற்றாத ஆதரவுடன் இந்த ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
ஆக இந்த ஊர்வலம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அஸ்ரின் கூறினார்.
இந்த ஊர்வலம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி சாலை வழியாக மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை ஊர்வலம் வந்தடையும்.
போலிசாரின் அனுமதியோடும் டிபிகேஎல்லின் இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆதரவோடு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எம்எம்ஒய்சி அமைப்பின் தலைவர் முகமது ரிஃபாய் சொன்னார்.
மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் அணி திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மஸ்ஜித்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்துகொள்ளும்படியும் வழி நெடுக நபி புகழ்பாடி வரும்படி அன்புடன் அழைப்பதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
