நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் 

ஹங் துவா ஜெயா: 

மலாக்கா மாநில தேர்தலில் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பிகேஆர் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார். 

கடந்த 2018 பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி பிகேஆர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அஹ்மத் டேனிஷ் ஹைருடின் கூறினார். 

2018ஆம் ஆண்டு தேசிய முன்னணி - அம்னோவை வீழ்த்த பிகேஆர் கட்சி கொடி பெரும் பங்கு வகித்தது என்றூ அவர் சொன்னார். 

பிகேஆரின் வலிமையையும் அடையாளத்தையும் பயன்படுத்தி நாம் மீண்டும் முன்னேறிச் செல்ல வேண்டிய தருணம் இது.

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 2027ஆம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் நிலை இருக்கும் வேளையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோப் கூறியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset