நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு 

ஹங் துவா ஜெயா: 

சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை தனது மடானி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

நாட்டின் முதலாவது அரசாங்கம் சபா, சரவாக்கை உட்படுத்திய MA63 உடன்படிக்கையை தேசிய கொள்கையாக எடுத்துக்கொண்டதாகவும் அன்வார் தெரிவித்தார். 

MA63 உடன்படிக்கை என்பது வெறும் சபா, சரவாக் மாநிலத்தை உட்படுத்தியதாக மட்டும் பார்க்கக்கூடாது. மாறாக அது ஒரு தேசிய கொள்கையாக கருத வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

தீபகற்பம் மலேசியா என்றும் சபா, சரவாக் மாநிலங்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் காண முடியும் என்று பிகேஆர் கட்சியின் காங்கிரஸ் நேஷனல் மாநாட்டை தொடக்கி வைத்து பிகேஆர் தலைவருமான அன்வார் உரையாற்றினார். 

MA63 கோரிக்கைகளைச் செயல்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் காண இடமுள்ளது என்று அன்வர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset