நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்

மலாக்கா:

தாபோங் ஹாஜி நிறுவனம் மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் திரட்டப்பட்ட நிதியில் பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் நிர்வாகக் குழுவில் உண்மையில் முறைகேடு இருந்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

முஸ்லிம்களின் சேமிப்பை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பண இழப்பு ஏற்பட்டதை உண்மைகள் காட்டினால், 'முறைகேடு' என்ற சொல்லைத் தவிர்க்கவோ அல்லது கேள்விக்குட்படுத்தவோ கூடாது.

சிலர் 'சகாவ்' (முறைகேடு) என்ற சொல்லை விரும்புவதில்லை.

மலாக்காவில், தாபோங் ஹாஜியில் உண்மையில் ஒரு முறைகேடு இருக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

12 பில்லியன் ரிங்கிட் காணாமல் போயுள்ளது, இது ஒரு முறைகேடா இல்லையா?... உண்மையில் ஒரு முறைகேடு இருக்கிறது.

அரசியல் பதவி அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

ஏனெனில் ஒரு சில தனிநபர்களின் செயல்களின் விளைவுகளை இறுதியில் அனைத்து மக்களும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset