நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்

கோல கங்சார்:

கோல கங்சாரில் உள்ள லெம்பா ஜெட்டி அருகே பேரா ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை சுமார் 3.12 மணியளவில், உள்ளூர் மலாய் ஆடவர் ஒருவர் ஆற்றில் சடலம் கிடப்பதாக கோல கங்சார் மாவட்ட போலிஸ்  தலைமையகத்திற்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலி சார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், சடலம் சுமார் 30 வயதுடைய பெண்ணுடையது என்பது தெரியவந்தது.

எனினும், இதுவரை அவரது அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.

மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலிஸ் தலைவர். ஹெய்ஷாம் ஹருன் தெரிவித்தார்.

சம்பவத்துக்கான காரணம், பின்னணி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஊகங்கள் அல்லது தூண்டுதல் கருத்துகளை வெளியிட வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் கோலா கங்சார் மாவட்ட போலிஸ் தலைமையகத்தை 05-776 2222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் வழங்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset