செய்திகள் மலேசியா
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
குவாந்தான்:
தெமர்லோ-திரியாங் சாலையில் இருவர் உயிரிழந்த சாலை விபத்தில் தொடர்புடைய டேங்கர் லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்போங் லெபாக் அருகே ஜாலான் தெமர்லோ-திரியாங் சாலையின் 9ஆவது கிலோமீட்டரில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹம்மத் நசிம் பஹ்ரோன் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் முகமட் நசிம் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் ரத்து செய்யப்படும்: பிரதமர்
August 15, 2026, 11:59 am
