செய்திகள் உலகம்
ஆங் சான் சூகிக்கு எதிராக மேலும் 5 ஊழல் வழக்குகள்
யாங்கூன்:
மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக அந்த நாட்டு ராணுவ அரசு மேலும் 5 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ஏற்கெனவே 5 ஊழல் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், அவர் மீது புதிதாக 5 ஊழல் குற்றச்சாட்டுகளை ராணுவ ஆட்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிய சூதாட்டக் கூடத்திலிருந்து இரண்டு சிங்கங்கள் மீட்பு
January 1, 2026, 9:05 pm
