நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் விமான நிலைய பாதுகாப்பினை வலுப்படுத்தும் திட்டம்: அடுத்த அமைச்சரவவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் 

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள விமான நிலைய பாதுகாப்பினை வலுப்படுத்தும் திட்டம் தொடர்பாக வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் 

இந்த தகவலை நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

25 கிலோ போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 39 வயதான அந்த மலேசிய விமானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் ஒருங்கிணைப்பு, பயிற்சி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்களின் செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரம் குறித்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் எடுத்துரைத்த வேளையில், விமான நிலையப் பாதுகாப்பிற்கு அனைத்துத் தரப்பும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்

கடந்த ஜூலை 29-ஆம் தேதி இந்தோனேசியாவின் சோகர்னோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் அந்த மலேசிய விமானி அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கடத்தப்பட்ட போதைப்பொருளின் அளவு அதிகம் என்பதால், இந்தச் சம்பவம் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset