நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகிய வோங் சென் பெர்சாமா கட்சியில் இணைந்தார்

சுபாங் ஜெயா: 

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமா கட்சியில் இணைந்துள்ளார். 

பெர்சாமா கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பி.கே.ஆர் கட்சியில் ஏறக்குறைய இரு தசாப்தங்களாகச் சேவை ஆற்றிய வோங் சென், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியாவார்.

தாம் எதிர்காலத்தில் கட்சியிலிருந்து விலகக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ரஃபிசி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மட் ஆகிய இருவரும் பெர்சாமா கட்சிக்கு தலைமை தாங்குவதற்காகத் தங்களின் நாடாளுமன்ற இடங்களைத் துறந்தனர்.

அவர்களின் அந்த முடிவைத் தொடர்ந்தே வோங் சென்னும் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகும் முடிவை மேற்கொண்டுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset