செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
பெட்டாலிங் ஜெயா:
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி கூறினார்.
தற்போது பெர்சாமா கட்சியில் சுமார் 29,200 உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாதவர்கள் என்றும் கட்சியின் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.
கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 60 சதவீதத்தினர் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத புதியவர்கள் ஆவர்.
அன்றாடம் பெறப்படும் உறுப்பினர் விண்ணப்பங்களில் இத்தகைய புதியவர்களின் பங்களிப்பே பெரும்பான்மையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாக்கத்தான் ஹரப்பான் தோல்வியடைந்த பின்னரே, பெர்சாமா கட்சியில் சேர விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்தன.
மேலும், கடந்த வாரம் வரையிலான தரவுகளின்படி, பெர்சாமா உறுப்பினர்களில் 25 சதவீதத்தினர் பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
