செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI அறிக்கையை விவாதிக்காமல் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு: டாக்டர் சலெஹா முஸ்தஃபா கடும் கண்டனம்
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் RCI அரச விசாரணை அறிக்கை குறித்து விவாதம் மேற்கொள்ள சிறப்பு மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சி தரப்பு விவாதத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது
இதற்கு பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சலெஹா முஸ்தஃபா கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கை வெறும் அரசியல் நாடகம் என்றும், முறையான விவாதங்களைத் தவிர்க்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதாக உரிமை கோரும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு, இந்த விவகாரத்தில் போதிய நேர்மை இல்லை என்று அவர் சாடினார்.
RCI அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து கேள்வி எழுப்பவும் விவாதிக்கவும் நாடாளுமன்றம் வாய்ப்பளித்த போதிலும், எதிர்க்கட்சியினர் அதனைப் பயன்படுத்தாமல் வெளிநடப்பு செய்யத் தேர்வு செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முதன்மை நிதியத்தின் நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரத்தில் அரசியல் சாகசங்களைச் செய்வதற்கான சரியான நேரம் இதுவல்ல என்றும் அவர் கண்டித்தார்.
முன்னதாக, தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கையின் விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தரப்பு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது
இருப்பினும், சபாநாயகர் எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் அவையிலிருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதில் கலந்துகொள்ள முடியாததால், இக்கூட்டத்தை வேறொரு தேதியில் நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
