நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்: மலேசியர்கள் சில நாட்களுக்குப் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்

கோத்தாபாரு:

தாய்லாந்தின் எல்லைக்குள் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து - ஆசியாவின் ஹலால் வர்த்தக, சுற்றுலா சங்கத்தின் தலைவர் ஐடா ஓஜே,

இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைக்கவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

நேற்று இரவு டஜன் கணக்கான குண்டு வெடிப்புகளும் தீ விபத்துகளும் நடந்தபோதிலும், நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு, மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்கான தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

தொடர்பு கொண்டபோது, ​இறைவன் நாடினால், இந்த மாத இறுதிக்குள், பள்ளி விடுமுறை நாட்களில் மலேசியர்கள் பயணம் செய்வதற்கு நிலைமை பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset