செய்திகள் உலகம்
சுனாமி மிரட்டல் ஓரளவு தணிந்துள்ளது: பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவிப்பு
டோக்கியோ:
டோங்கா தீவுக்கருகே கடலுக்கடியில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து நிலவிய சுனாமி மிரட்டல் தணிந்துள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி அது எச்சரித்தது.
டோங்காவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் எந்த அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
தொடர்புகளை மீண்டும் கொண்டுவர பசிபிக் நாடுகளும் மனிதாபிமான அமைப்புகளும் சிரமப்படுகின்றன.

டோங்காவில் வசிக்கும் சுமார் 100,000 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஜப்பானில், அமாமீ நகரில் 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலை பதிவு செய்யப்பட்டது.
இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ பெரும் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.
பசிபிக் கரையோரங்களில் வசிக்கும் 230,000 பேரை வீடுகளைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸிலும் குவீன்ஸ்லந்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
