
செய்திகள் உலகம்
சுனாமி மிரட்டல் ஓரளவு தணிந்துள்ளது: பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவிப்பு
டோக்கியோ:
டோங்கா தீவுக்கருகே கடலுக்கடியில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து நிலவிய சுனாமி மிரட்டல் தணிந்துள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி அது எச்சரித்தது.
டோங்காவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் எந்த அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
தொடர்புகளை மீண்டும் கொண்டுவர பசிபிக் நாடுகளும் மனிதாபிமான அமைப்புகளும் சிரமப்படுகின்றன.
டோங்காவில் வசிக்கும் சுமார் 100,000 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஜப்பானில், அமாமீ நகரில் 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலை பதிவு செய்யப்பட்டது.
இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ பெரும் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.
பசிபிக் கரையோரங்களில் வசிக்கும் 230,000 பேரை வீடுகளைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸிலும் குவீன்ஸ்லந்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm