செய்திகள் விளையாட்டு
ஓய்வு பெறுவது எப்போது என்பதை மெஸ்சியே தீர்மானிக்கிறார்: டாபியா
போனஸ் அயர்ஸ்:
தனது அனைத்துலக கால்பந்து வாழ்க்கையை எப்போது முடித்துக் கொள்வது என்பதை லியோனல் மெஸ்சியே முடிவு செய்வார்.
அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியின் ஆட்டத்தைக் கண்ட பிறகு, 39 வயதான அவரை சர்வதேச அரங்கிலிருந்து விலகுமாறு கேட்பதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை.
இது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் அமைதியடைய நாம் அனுமதிக்க வேண்டும் என்று அர்ஜெண்டினா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டாபியா கூறினார்.
2022-ல் அவர் விளையாடுவாரா என்பது நமக்குத் தெரியாது. இது ஒவ்வொரு ஆட்டத்தைப் பொறுத்தது.
மேலும், உலகக் கிண்ண போட்டியில் லியோவின் மிகச்சிறந்த வடிவத்தை, ஒருவேளை அவரது சிறந்த வடிவத்தையே நாம் கண்டோம் என நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 7, 2026, 9:15 am
சிப்பாங்கில் நடைபெறும் பஹ்ரைன் எப் 1 கார் பந்தயம் பிற்பகலில் நடைபெறுகிறது
August 6, 2026, 8:57 am
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
