நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து திடலில் மின்னல் தாக்கியதில் மலேசியர் உட்பட 12 கால்பந்து வீரர்கள் காயம்: ஒருவர் உயிரிழந்தார்

சுங்கை கோலோக்:

சுங்கை கோலோக்கில் நடைபெற்ற  கால்பந்துப் போட்டியின்போது, ​​திடலில் மின்னலால் தாக்கப்பட்டதில் காயமடைந்த 12 கால்பந்து வீரர்களில் மலேசியர் ஒருவரும் அடங்குவார்.

இந்தச் சம்பவத்தில், தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

சாந்திபாப் மைதானத்தில் நடைபெற்ற கோலோக் கால்பந்து கழக கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தின்போது, ​​உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சுங்கை கோலோக் போலிஸ் நிலையத் தலைவர் கர்னல் துன் சிரிகுந்த் தெரிவித்தார்.

சாம்கோல்ட்ஸ் அணிக்கும் அபு நோங் சிரின் அணிக்கும் இடையேயான ஆட்டம் முடிவடைந்த நிலையில், மைதானத்தின் நடுவில் கனமழையைத் தொடர்ந்து மின்னல் தாக்கியதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset