செய்திகள் விளையாட்டு
கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: நாட்டின் கலப்பு இரட்டையர் ஜோடி சென் டாங் ஜீ- கிளாரிசா சான் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்
சியோல்:
கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜீ - கிளாரிசா சான் முதன்முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
அவர்கள் இரண்டவது சுற்றில் தைவான் நாட்டின் ஜோடியை தோற்கடித்தனர்.
41 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான போட்டியில் வூ சூன்-யி - யாங் சூ யுன் ஜோடியை 21-11, 13-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்களின் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
காலிறுதிப் போட்டியில் இவர்கள் ஜப்பானைச் சேர்ந்த ஹருகி கவாபே - கோகோனா இஷிகாவா ஜோடியை எதிர்கொள்கின்றனர்.
அரை இறுதிக்கு முன்னேறும் போராட்டத்தில் இந்த ஜோடி கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 8:57 am
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
August 4, 2026, 8:24 am
பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது
August 3, 2026, 2:53 pm
டத்தோ சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் எச்எஸ்எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
August 3, 2026, 11:22 am
