நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: நாட்டின் கலப்பு இரட்டையர் ஜோடி சென் டாங் ஜீ- கிளாரிசா சான் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்

சியோல்: 

கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜீ - கிளாரிசா சான் முதன்முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

அவர்கள் இரண்டவது சுற்றில் தைவான் நாட்டின் ஜோடியை தோற்கடித்தனர். 

41 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான போட்டியில் வூ சூன்-யி - யாங் சூ யுன் ஜோடியை 21-11, 13-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்களின் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

காலிறுதிப் போட்டியில் இவர்கள் ஜப்பானைச் சேர்ந்த ஹருகி கவாபே - கோகோனா இஷிகாவா ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

அரை இறுதிக்கு முன்னேறும் போராட்டத்தில் இந்த ஜோடி கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset