செய்திகள் விளையாட்டு
பளுதூக்குதலுக்காக ஆண்டுக்கு 1 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்குவது குறித்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது
கோலாலம்பூர்:
பளுதூக்குதலுக்காக ஆண்டுக்கு 1 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்குவது குறித்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது தௌஃபிக் ஜொஹரி இதனை கூறினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் தனது இலக்கில், பளுதூக்கும் விளையாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக,
மலேசிய பளுதூக்கும் கூட்டமைப்புக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1 மில்லியன் மானியம் ரிங்கிட் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமைச்சு பரிசீலிக்கத் தயாராக உள்ளது.
கூடுதல் நிதித் தேவைகள், குறிப்பாக நிர்வாகச் செலவுகள், பயிற்சியாளர் நலன் தொடர்பான மேலதிக தகவல்கள் அமைச்சிற்குக் கிடைத்த பிறகு, இந்த விண்ணப்பம் கூட்டமைப்பு தலைமையுடன் விரிவாக விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டு பளுதூக்குதல் மேம்பாட்டிற்காக அமைச்சு ஏற்கெனவே 4.1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
அதில் விளையாட்டு வீரர், பயிற்சியாளர் திட்டங்கள், அத்துடன் 'ரோட் டு கோல்ட்' முயற்சி, போடியம் திட்டம், பெலாபிஸ் திட்டம் மற்றும் அடிமட்டத் திறமை மேம்பாடு ஆகியவற்றின் மூலமான ஆதரவும் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 8:57 am
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
August 4, 2026, 8:24 am
பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது
August 3, 2026, 2:53 pm
டத்தோ சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் எச்எஸ்எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
August 3, 2026, 11:22 am
மென்செஸ்டர் யுனைடெட் பிரிமியர் லீக்கை வெல்ல முடியும்: யோரோ நம்பிக்கை
August 2, 2026, 10:16 am
