நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்மின் விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கலந்து கொள்கிறார் 

கோலாலம்பூர்:

முக்மின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிகழ்வில்  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கலந்துகொள்கிறார் என்று முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவுத் கூறினார். 

திறன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் துணைப்பிரதமர் கலந்துகொள்வதோடு மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு பயனளிக்கும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்  மேலும் கூறினார்.  

நம் இளையோரிடம் திறமைகளை வளர்ப்பதற்கும் மலேசியாவின் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கும் MUKMIN இன் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும் என்று அவர் கூறினார்.

MUKMIN தொழில்துறை சார்ந்த மேம்பாடு, தொழில்முறை சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு வழிகள், தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான மனித மூலதனத்தை வளர்ப்பதில் MUKMIN இன் உறுதிப்பாட்டை இந்த மாபெரும் முயற்சி பிரதிபலிக்கிறது என்று டத்தோ வீரா ஷாகுல் தாவுத் தெரிவித்தார்.

எங்கள் மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து இந்த முக்கியமான தேசிய முயற்சியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

2026 ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு, கோலாலம்பூரில் உள்ள தி ஆர்ச் கேலரிஸில் நடைபெறும் இந்த நிகழ்வு வரலாற்றின் முக்கிய தடம் என்று கருதப்படுகிறது.

கடந்த மாதம் பினாங்கு பட்டர்வொர்த்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட நிகழ்வில் மலேசிய இந்திய முஸ்லிம் பிள்ளைகளின் கல்விக்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான, அதிகத் திறன்கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு தேசத்தைக் கட்டமைப்பதில் நமது முயற்சிகளை இறைவன் ஏற்றுக் கொண்டு சரியான பாதையில் வழிநடத்தி நமக்கு வெற்றியை வழங்குவானாக என்று டத்தோ வீரா ஷாகுல் தாவுத் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset