நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை தாண்டியது; 314 பேர் பலி:  சுகாதாரத்துறை அறிவிப்பு

புது டெல்லி: 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.86 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.71 கோடியை தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  பாதித்தவர்கள், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,71,202 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,71,22,614 ஆக உயர்ந்தது.

* புதிதாக 314 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,86,066 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,50,85,721 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,50,377 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.18% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் 1,56,76,15,454 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 66,21,395 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset