நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக திடீரென அறிவித்தார்.

கன்னோஜ் தொகுதிக்கான சமாஜவாதி கட்சி வேட்பாளராக தேஜ் பிரதாப் யாதவ் அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், தேஜ் பிரதாபுக்கு பதிலாக அகிலேஷ் யாதவ் போட்டியிடப் போவதாக திடீரென சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் ஆகிய அனைவரும் என்டிஏ கூட்டணியை தோற்கடிக்க உள்ளனர் என்றார்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் பதவி வகித்து வருகிறார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset