நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்

புது டெல்லி:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார். அதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை, அநீதி குறித்துதான் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. அதைப்போக்க காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரிவிக்கவில்லை.

ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் கண்டு அஞ்சி பொய்களை பரப்பி வருகிறார் என்றார் ராகுல்.

மேலும், தேச பக்தர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி, பாஜகவினருக்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாலே அச்சம் ஏற்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் ராகுல் கூறினார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset