நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், நெகிரி செம்பிலானில் BN வெற்றி: ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை 

கோலாலம்பூர்: 

ஜொகூர், நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி வெற்றிப்பெற்ற நிலையில் அது மத்தியில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்காது என்று அரசாங்க பேச்சாளர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

மாநில அளவிலான அரசியல் ஒத்துழைப்பை கூட்டாட்சி மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய புரிதலிலிருந்து தனித்துவமான விஷயங்களாகப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

தற்போதைய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு முன்பே கையெழுத்தானது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, அதாவது இந்த ஆட்சிக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும்

"கூட்டணிக் கட்சிகளின் அர்ப்பணிப்பும் மிகவும் தெளிவாக உள்ளது. எனவே, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சூழலையும் நாங்கள் பார்க்கவில்லை," என்று அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset