செய்திகள் மலேசியா
இளம் பெண்ணை மானபங்கம் செய்ததாக வேலையில்லா ஆடவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
ஆயர் கெரோ:
கடந்த சனிக்கிழமை 17 வயதுடைய ஓர் இளம்பெண்ணை பாலியல் ரீதியாக மானபங்கம் செய்ததாக வேலையில்லா ஆடவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
நீதிபதி ரொஹத்துல் அக்மார் அப்துல்லா முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 38 வயதான முஹம்மத் அஸ்ரோய் ரசாலி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
இருப்பினும் அவர் தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து விசாரணை கோரினார்.
2017 சிறார்கள் பாலியங்கள் குற்றங்கள் சட்டத்தின் செக்ஷன் 14 ஏ இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 8 மணியளவில் மலாக்காவில் பாதிக்கப்பட்டவரை தங்கும் விடுதியில் அவர் குற்றத்தை புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது
நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கப்படாது எனத் தீர்மானித்து, இந்த வழக்கை செப்டம்பர் 8 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 5:44 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் BN வெற்றி: ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை
August 6, 2026, 5:18 pm
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறும்
August 6, 2026, 3:51 pm
