செய்திகள் மலேசியா
சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு சென்ற சம்பவம்: சிறை அதிகாரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
மலாக்கா:
சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக RM 3000 ரிங்கிட் லஞ்சம் கோரியது, பெற்றது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உதவ ஒரு சிறை அதிகாரி ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
20 வயதுடைய ஆண் சந்தேக நபருக்கு எதிராக ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆயர் கெரோ நீதிமன்றத்தில் மேற்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டது
சந்தேக நபர் நேற்று காலை சுமார் 11.50 மணியளவில் சுங்கை பெட்டானியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் மலாக்காவில் உள்ள ஒரு சிறையில் பணிபுரிந்தபோது இந்தச் செயலைப் புரிந்தார் என நம்பப்படுகிறது.
மின்னியல் பணப்பட்டுவாடா மூலம் சந்தேக நபர் RM3000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது
இந்த வழக்கு விசாரணை 2009 எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்ஷன் 17(ஏ) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 9:51 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைந்தது
August 5, 2026, 9:33 pm
கோவில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தினால் அரசுக்கு ஆதரவு பெருகும்: மஹிமா
August 5, 2026, 4:04 pm
2026 அம்னோவின் பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்
August 5, 2026, 3:57 pm
சரவாக் மாநில பிரிமியருடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்
August 5, 2026, 3:56 pm
தபோங் ஹாஜி RCI அரச விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு கலந்துரையாடல்: தேசிய முன்னணி நடத்துகிறது
August 5, 2026, 2:39 pm
