நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜி ஆர்சிஐ: மேலும் 3 பேர் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்

புத்ராஜெயா:

தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கையில் வெளிப்பட்ட தகவல்கள் தொடர்பான தனது விசாரணையில், எம்ஏசிசி மேலும் மூன்று நபர்களைக் கைது செய்துள்ளது.

கட்டுமானத் துறையின் துணைப் பொது நிர்வாகி, தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு நிர்வாகி, அந்த சட்டப்பூர்வ அமைப்பின் துணை நிறுவனமாக உள்ள ஒரு சொத்து நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 450,000 ரிங்கிட் மதிப்புள்ள அபராத அறிவிப்பு கட்டணங்களைத் திசைதிருப்புவதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

50 வயதான அனைத்து ஆண் சந்தேக நபர்களும், நேற்று மாலை 6 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset