செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI அரச விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு கலந்துரையாடல்: தேசிய முன்னணி நடத்துகிறது
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கை ஆணையத்தின் அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக, தேசிய முன்னணி வரும் திங்கட்கிழமை ஒரு சிறப்பு விளக்கக் கூட்டத்தை நடத்தும்.
தபோங் ஹாஜி வாரியத்தின் மீதான RCI அறிக்கைகள் குறித்து எதிர்வரும் 11ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் சிறப்பு மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படவிருக்கிறது.
இந்த சிறப்பு விளக்கக் கூட்டத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கலந்து கொள்ளவுள்ளார். இந்த சந்திப்பு டேவான் துன் டாக்டர் இஸ்மாயில், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் சிறப்பு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங், டத்தோஶ்ரீ அர்துர் ஜோசப் ஆகிய தலைவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தபோங் ஹாஜி வாரியத்தின் RCI அறிக்கை குறித்து சிறப்பு மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 9:51 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைந்தது
August 5, 2026, 9:33 pm
கோவில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தினால் அரசுக்கு ஆதரவு பெருகும்: மஹிமா
August 5, 2026, 4:04 pm
2026 அம்னோவின் பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்
August 5, 2026, 3:57 pm
சரவாக் மாநில பிரிமியருடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்
August 5, 2026, 2:39 pm
