நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநில பிரிமியருடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார் 

கோலாலம்பூர்: 

சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங்கை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஜொகூரில் உள்ள இஸ்தானா பாசீர் பெலாங்கியில் சந்தித்தார். 

மாமன்னருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்டதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி, சரவாக் மாநில செயலாளர் டத்தோ அமார் முஹம்மத் அபு பக்கார், ஜொகூர் மாநில நிதி அதிகாரி டத்தோ முஹம்மத் நூரஸாம் ஒஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, சரவாக் மாநில பிரிமியரை சந்தித்ததாக கூறப்படும் புகைப்படத்தை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset