
செய்திகள் உலகம்
திவாலாகிறதா இலங்கை? உணவு தட்டுப்பாடு உச்சத்தில் உள்ளது: பொருளாதார நெருக்கடியில் தள்ளாடுகிறது இலங்கை
கொழும்பு:
அந்நிய செலாவணி கரைந்து போனதால் திவாலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இலங்கை. அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு அங்கு உயர்ந்துள்ளது. சாமான்ய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இலங்கைக்கு ரூ. 6,700 கோடி கடனுதவி அளிக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு, நாட்டின் பணவீக்கம், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
சீனாவிடமும், சர்வதேச வங்கிகளிடமும் கடன் பெற்றுள்ள இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 7.3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசு திருப்பி செலுத்தவேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்திற்குள்ளாக 500 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை சிக்கியுள்ளது.
உணவு,பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அவற்றை இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை தவித்து நிற்கின்றது.
இதையடுத்து இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தற்போதைய சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 6,700 கோடியை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதன்மூலம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm