நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது: டத்தோ டி. மோகன்

போர்ட்டிக்சன்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது.

மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இறுதிக் கட்டத்தில் தான் பல்வேறு அவதூறுகள், பொய்யான தகவல்கள் பரப்பப்படும்.

குறிப்பாக தேசிய முன்னணி மீது பாஸ் கட்சி விவகாரம் உட்பட பல குற்றச்சாட்டுகளை எழுப்புவார்கள்.

அதே வேளையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மன்னிப்பு, எம்ஜிஆர் நடனம் என பல நாடகங்கள் அரங்கேறும்.

இதை பார்த்து மக்கள் ஏமார்ந்து விடக் கூடாது.

நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்.

குறிப்பாக சிரம்பான் ஜெயாவில் தினாளனும் ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதனும் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த ஆதரவு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உருமாற்றத்திற்கும் வித்திடும்.

ஸ்ரீ தஞ்சோங் தொகுதி இந்திய மக்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்கு பின் டத்தோ டி. மோகன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset