செய்திகள் மலேசியா
மூடா கட்சி மக்களுக்கு உதவுவதைக் கண்டு அஞ்சுவது ஏன்?: கேள்வி எழுப்பும் சையத் சாதிக்
ஜோகூர்:
தமது சொந்தத் தொகுதியான மூவாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கு மூடா கட்சித் தலைவர் சையத் சாதிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உதவும் தமது கட்சியின் நடவடிக்கைகளைப் பார்த்து எதிர்த்தரப்பினர் அஞ்சுகிறார்களா என்று மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளையும், தங்கள் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
பல்வேறு தரப்பினரும் பொது மக்களுக்கு உதவி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள மூடா கட்சியினர் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக அளித்த விண்ணப்பத்தை மூவார் மாவட்ட மன்ற அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டதாக சையட் சாதிக் கூறியுள்ளார். தங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணமும் விளக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூடா கட்சி உதவி செய்வதைக் கண்டு அஞ்சுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில்தான், மூடா கட்சிக்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சங்கப்பதிவிலாகா (உள்துறை) அங்கீகாரக் கடிதத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
