செய்திகள் மலேசியா
சீராட் அனைத்துலக மாநாடு சமுதாயத்தின் நம்பிக்கையாகும்: டத்தோ வீரா ஷாகுல்
கோலாலம்பூர்:
சீராட் அனைத்துலக மாநாடு சாதாரண மாநாடு அல்ல. சமுதாயத்தின் மிகப் பெரிய நம்பிக்கையாகும்.
முக்மின் சீராட் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
முக்மின் - மிம்கோய்ன் ஏற்பாட்டில் நடைபெறும் சீராட் அனைத்துலக வர்த்தகர் மாநாடு தலைநகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 17 நாடுகளில் இருந்து 800 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
உலகளாவிய இந்திய முஸ்லிம் சமுதாய மக்களை இந்த மாநாடு ஒன்றிணைந்துள்ளது.
இதுவொரு சாதாரண மாநாடு அல்ல. அப்படியொரு சிந்தனையை யாரும் கொண்டிருக்க வேண்டாம்.
காரணம் இந்த சீராட் சமுதாயத்தின் நம்பிக்கை. இளைஞர்களின் எதிர்காலம், சக்தியாகும்.
அதே வேளையில் சமுதாயத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உலகளாவிய நிலையில் உள்ள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே இம்மாநாட்டின் நோக்கம்.
இந்த நோக்கம் சமுதாய மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.
ஆக அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் முழுமையாக கலந்து பயன் பெற வேண்டும் என்று அவர் டத்தோ வீரா ஷாகுல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 1:53 pm
மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையை நிறுத்துங்கள்: பிரதமர்
January 23, 2026, 10:34 pm
7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
January 23, 2026, 9:25 pm
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்
January 23, 2026, 9:24 pm
