நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

எரிசக்தி விநியோகத்தில் நெருக்கடிகள் இருந்தபோதிலும், மலேசியாவின் வளர்ச்சி 4-5 சதவீத கணிப்பின் உயர் வரம்பை எட்டும்: பாங்க் நெகாரா ஆளுநர் டத்தோ ஸ்ரீ  அப்துல் ரஷீத் கஃபூர்

கோலாலம்பூர்:

எரிசக்தி விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், 2026-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் பொருளாதாரம் நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை வளரும் என்றும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்றும் பாங்க் நெகாரா மலேசியா ஆளுநர் டத்தோ ஸ்ரீ  அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வலுவான பொருளாதார அடிப்படைகள், சீர்திருத்தத் திட்டங்கள் மற்றும் சிறந்த பொருளாதார மேலாண்மை ஆகியவையே இந்த நிலைத்தன்மைக்குக் காரணம் என்று அவர் கூறுகிறார். இவை, பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவதில் பாங்க் நெகாராவின் முயற்சிகளால் ஆதரிக்கப்பட்டுள்ளன.

சசானா சிம்போசியம் 2026- கருத்தரங்கில் உரையாற்றிய அப்துல் ரஷீத், மலேசியாவின் பொருளாதார சாதனைகளை எடுத்துரைத்ததோடு, தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நிலையான நிதிக் கொள்கைகள், எதிர்காலத்திற்கு உகந்த நிதி அமைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

நாட்டின் நடுத்தர காலக் கண்ணோட்டம் சாதகமாகவே உள்ளது; உறுதியான வளர்ச்சி மற்றும் நிலையான பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset