செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடம் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோருக்கு மூன்று நாள் கட்டாய மறுபரிசீலனைக் காலம் வழங்கப்படவுள்ளது.
புதிய நடைமுறை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்று சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று நாள்களுக்குள் கடன் வேண்டாம் என்று முடிவெடுப்பவர்கள், குறைந்த செலவில் அதனை ரத்து செய்யலாம்.
அவர்கள் வட்டி செலுத்தத் தேவையில்லை.
கடன் வழங்குபவர்கள், கடன் ஒப்புதல் கட்டணத்தில் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
5,000 சிங்கப்பூர் வெள்ளி வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக 50 வெள்ளி வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு மேற்பட்ட கடன்களுக்குக் கடன் தொகையில் அதிகபட்சமாக 3.5 விழுக்காடு வைத்துக்கொள்ளலாம்.
வர்த்தகக் கடன்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தாது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
