நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா

புது டெல்லி:

ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Tata Sons ஆகியவற்றிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் நிதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏர் இந்தியா இதுவரை இல்லாத அளவில் நட்டத்தைச் சந்தித்ததை அடுத்து அத்தகவல் வெளியாகியுள்ளது.

Air India Express கடந்த நிதியாண்டில் 2.33 பில்லியன் டாலர் நட்டத்தைக் கண்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சுமார் 25 விழுக்காட்டுப் பங்கை கொண்டிருக்கிறது.

சுமார் 75 விழுக்காட்டுப் பங்கை Tata கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் பங்குகள் மூலம் மேலும் 1.5 பில்லியன் டாலர் ஈட்ட ஏர் இந்தியா திட்டமிடுவதாக விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset