செய்திகள் மலேசியா
மலையில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி: புஞ்சாக் ஆலாமில் உள்ள இரு பள்ளிகள் மூட உத்தரவு
பெட்டாலிங் ஜெயா-
புஞ்சாக் ஆலாமில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கிட்டத்தட்ட 4.5 ஏக்கர் நிலங்களில் தீ வேகமாக பரவின
இந்த சம்பவத்தை அடுத்து அருகிலுள்ள இரு பள்ளிக்கூடங்கள் மூட கோல சிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகம் தற்போது உத்தரவிட்டது.
புஞ்சாக் ஆலாம் 2 தேசிய பள்ளி, புஞ்சாக் ஆலாம் ஆரம்ப சமயப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புஞ்சாக் ஆலாமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு காலை 10.06 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மற்றும் மீட்புத்துறை தரப்பு தெரிவித்தது.
புக்கிட் ஜெலுடோங் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மலைச்சரிவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் சௌஜனா உத்தாமா தன்னார்வ தீயணைப்புப் படையினர், பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
