செய்திகள் மலேசியா
தைப்பிங்கில் தடுப்புக் காவலில் இருந்த ஆடவர் மரணம்
தைப்பிங:
தைப்பிங மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை காவல்துறை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த அந்த 63 வயது ஆடவர் திருட்டுக் குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி இருந்த நிலையில், தைப்பிங் IPD லாக்-அப்பில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை, புக்கிட் அமான்,
ஒருங்கிணைப்பு மற்றும் தரநிலை இணக்கத்துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரீ அஹமத் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட அந்த ஆடவர், இருசக்கர வாகனம் ஒன்றை திருடிய குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தார். மேலும், ஆயுதம் கொண்டு சிறு காயத்தை ஏற்படுத்திய புகாரும் உள்ளது.
"இந்நிலையில் அவர் தடுப்புக் காவலில் இறந்துபோனது குறித்து தடுப்புக்காவல் மரணத்துக்கான குற்றவியல் புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளும்," என்று டத்தோ அஸ்ரீ அஹமத் மேலும் கூறியுள்ளார்.
தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு தடுப்புக்காவல் மரணச் சம்பவம் பதிவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am