நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு: காசோலை மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் தீர்ப்பு 

சென்னை-

மன்னர் வகையறா திரைப்படத்திற்காக 4.5 கோடி ரூபாய் வாங்கி கடன் தொடர்பான வழக்கில் நடிகர் விமல் காசோலை மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

இந்நிலையில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது 

இதனிடையே, மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. 

மன்னர் வகையறா படத்திற்காக அரசு பிலிம்ஸ் கோபியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நடிகர் விமல் களவாணி, பசங்க, மன்னர் வகையறா, தேசிங்கு ராஜா, இஷ்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset