
செய்திகள் உலகம்
சீனாவில் இரும்பு கொள்கலனில் தனிமைப்படுத்தப்படும் 2 கோடி மக்கள்
பெய்ஜிங்:
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து 'கொரோனா இல்லா சீனா' என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க லட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
கொரோனாதொற்றுப் பரவலின் ஆபத்தான மாறுபாடு ஓமிக்ரான் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், இந்த மாறுபாட்டை தவிர்க்க சீனா தனது நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அங்கு 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஓமிக்ரான் பதிப்பு 2 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு கண்டைனர்களால் உருவாக்கப்பட்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஷிஜியாசுவாங் மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்யாங் உட்பட பல நகரங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்களை அவர்கள் வீடுகளில் அடைத்து தனிமைப்படுத்தி சீன அரசாங்கம் வைத்துள்ளது.
சீனா இதுவரை மொத்தம் 2 கோடி மக்கள் அன்யாங் மற்றும் யூசோ நகரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm