செய்திகள் உலகம்
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி; தாய்லாந்தில் 4,576 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்; 617 பேர் கைது
பேங்காக்:
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த 4,576 கால்பந்துச் சூதாட்ட இணையத்தளங்களைத் தாய்லாந்துக் காவல்துறை முடக்கியுள்ளது. அத்துடன், 617 பந்தயப் பிடிப்பாளர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 20 பில்லியன் பாட்டிற்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து அரசக் காவல்துறையின் தகவல் தொழில்நுட்பக் குற்ற ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் தானா சுவோங் தெரிவித்துள்ளார்.
இணையவழி மோசடிகளுக்குப் போலி வங்கிக் கணக்குகள் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதுபோன்ற போலி வங்கிக் கணக்குக் கட்டமைப்புகளை வேரோடு துடைத்தொழிக்கும் தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 5:39 pm
பிரிட்டன் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளிகள்
July 21, 2026, 12:39 pm
வெனிசுவேலாவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 5,278ஆக உயர்வு
July 21, 2026, 11:13 am
இலங்கையில் தீவிரமடையும் டெங்கி காய்ச்சல்: பரவலைக் கட்டுப்படுத்த ஆயுதப் படைகள் களம் இறக்கம்
July 18, 2026, 6:59 pm
