நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெனிசுவேலாவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 5,278ஆக உயர்வு 

கராகஸ்- 

வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் நிகழ்ந்தது

இந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் வடக்கு பகுதியிலும், குறிப்பாகத் தலைநகர் கராகஸுக்கு அருகிலுள்ள கடற்கரை மாநிலமான லா குவைராவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.

இந்த பேரிடரில் குறைந்தது 5,278 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக உள்ளது

மேலும், 850-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 190 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த இயற்கைச் சீற்றத்தினால் வீடுகளை இழந்த 23,500-க்கும் மேற்பட்ட மக்கள் விளையாட்டரங்கங்கள் மற்றும் பொதுச் சதுக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset