செய்திகள் உலகம்
பிரிட்டன் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளிகள்
லண்டன்:
பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டி பா்ன்ஹாம் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 36 வயதான கனிஷ்க நாராயணன் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதேநேரம், மற்றொரு இந்திய வம்சாவளியான லிசா நேண்டி கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறையின் பொறுப்புகளுடன் எண்ம சேவைகள் துறையின் அமைச்சராகக் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளாா்.
பிஹாரில் பிறந்த கனிஷ்க நாராயணன், தனது 12-ஆவது வயதில் வேல்ஸில் குடும்பத்துடன் குடியேறியனாா். ஆக்ஸ்போா்டு, ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயின்ற இவா், 2024 பொதுத்தோ்தலில் வேல்ஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் சிறுபான்மையின எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவா்.
இதேபோல், தெற்காசிய பின்னணியைக் கொண்ட ஷபானா மஹ்மூத் தொடா்ந்து உள்துறை அமைச்சராக நீடிக்கிறாா். இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்த ஜோனாதன் ரெனால்ட்ஸ் மீண்டும் வா்த்தகம், அறிவியல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 12:39 pm
வெனிசுவேலாவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 5,278ஆக உயர்வு
July 21, 2026, 11:13 am
இலங்கையில் தீவிரமடையும் டெங்கி காய்ச்சல்: பரவலைக் கட்டுப்படுத்த ஆயுதப் படைகள் களம் இறக்கம்
July 18, 2026, 6:59 pm
