செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 200,000 வெள்ளி மதிப்புடைய வைரத்தைத் திருடிய இரு இந்திய நாட்டவர் கையும் களவுமாக பிடிபட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சைனாடவுன் கடையிலிருந்து 200,000 வெள்ளி மதிப்புடைய வைரத்தைத் திருடிய ஆடவர் ஒருவருக்கு ஈராண்டு இரண்டரை மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
41 வயது மாங்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய்யும் 30 வயது செரசியா மிலன் ராம்நிக்பாய்யும் இணைந்து குற்றத்தைப் புரிந்தனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
திருட்டை மேற்கொள்ளத் திட்டமிட்டே அவர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் செய்தனர்.
அதற்கு முன்னர் இருவரும் குஜராத் மாநிலத்தின் சூரத் (Surat) நகரிலிலிருந்து போலி வைரத்தை வாங்கினர்.
சைனாடவுன் நகைக்கடைக்குச் சென்ற அவர்கள் உண்மையான வைரத்தைத் திருடி அதற்குப் பதிலாகப் போலி வைரத்தைக் கடையில் வைத்தனர்.
இவ்வாண்டு ஜூன் 19ஆம் தேதி இருவரும் சிங்கப்பூருக்கு வந்தனர்.
அதே நாள் பிற்பகல் 3 மணிக்கு இருவரும் கடைக்குச் சென்றனர்.
திட்டமிட்டபடி அவர்கள் திருட்டைப் புரிந்தனர்.
அவர்களுடைய செயல் கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அதே நாள் இரவு அவர்கள் இந்தியாவுக்குச் செல்லவிருந்தனர்.
அன்றிரவு சுமார் 8.50 மணிக்கு இருவரும் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அந்த இரு இந்தியர்களும் இத்தகைய திருட்டுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 12:39 pm
வெனிசுவேலாவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 5,278ஆக உயர்வு
July 21, 2026, 11:13 am
இலங்கையில் தீவிரமடையும் டெங்கி காய்ச்சல்: பரவலைக் கட்டுப்படுத்த ஆயுதப் படைகள் களம் இறக்கம்
July 18, 2026, 6:59 pm
துருக்கியேவில் நிலநடுக்கம்
July 18, 2026, 6:32 pm
ஆன்டி புர்ன்ஹாம் பிரிட்டனின் புதிய பிரதமராக திங்களன்று பதவி ஏற்கிறார்
July 18, 2026, 3:44 pm
