நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்: பெரும்பாலான விமானங்கள் மறு அட்டவணை 

குவைத் சிட்டி: 

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற சூழல், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நாட்டின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. 

அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான 'குவைத் ஏர்வேஸ்'  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குவைத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வந்து சேர வேண்டிய பெரும்பாலான விமானங்கள் மறுஅட்டவணை செய்யப்பட்டுள்ளதாக

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள மோதலின் எதிரொலியாகவே இந்த விமான நிலைய முடக்கம் நிகழ்ந்துள்ளது.

மேலும், பயணிகள் தங்களின் தற்போதைய விமானப் பயண விவரங்களை உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள இந்த நேரடி மோதல் மற்றும் பரஸ்பரத் தாக்குதல்கள், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்பொழுது பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset